22/06/2019

குழந்தையாகவே இருந்திருந்தால்



நாளைய உணவை எண்ணி
நாயாய் அலைய வேண்டாம்

நேற்றைய நிகழ்வை அள்ளி
நினைவாய்ச் சுமக்க வேண்டாம்!

நான் என்னும் கர்வத்திலே
நாள்களைக் கழிக்க வேண்டாம்!

வான் மிகும் துயரத்திலே
வாடிமனம் நோக வேண்டாம்!

சாதிமத இனவெறியில்
சண்டையிட்டு சாக வேண்டாம்!

சாக்கடை அரசியலை
சகித்துப்போய் நகர வேண்டாம்!

முகநூலில் எழுதிவிட்டு
முடிந்ததாய் எண்ண வேண்டாம்!

புலனத்தின் செய்திகளை
புரியாமல் தள்ள வேண்டாம்!

இதுவும் கவிதையென
இதையும் படிக்க வேண்டாம்!

அப்படியே படித்தாலும்
அனைத்தையும் சகிக்க வேண்டாம்!

ஆம்....நாம் மட்டும் இன்னும்
#குழந்தையாகவே_இருந்திருந்தால்

✍️செ. இராசா

No comments: