05/06/2019

சிறைபட்டுப் போவதா வாழ்க்கை?!

இல்லாததை நினைத்து
இருப்பதை இழப்பதா வாழ்க்கை?!
இருப்பதைப் பெருக்கி
இருப்பை உணர்வதே வாழ்க்கை!

மனிதத்தைத் தொலைத்து
மறைகளைப் படிப்பதா வாழ்க்கை?!
மறைபொருளை உணர்ந்து
மறையாப்புகழ் பெறுவதே வாழ்க்கை!

சிந்தையைச் சுருக்கி
சிறைபட்டுப் போவதா வாழ்க்கை?!
சிந்தையை விரித்து
சிறகடித்துப் பறப்பதே வாழ்க்கை!

✍️செ. இராசா

#சிறைச்சாலை உணவகம்

No comments: