26/06/2019

#நீரின்று_அமையாது_உலகு


#நீரின்று_அமையாது_உலகு
💧💧💧💧💧💧💧💧💧💧


கரிகாலன் கட்டி வச்சக்
கல்லணையும் கண்டோம்- சோழ
ராஜன் வெட்டி வச்ச
வீராணமும் கண்டோம்!

ஏரி குளம் கண்மாய் என்று
மாரி நீரைக் கண்டோம்- அன்று
ஆறு ஓடும் பாதையெல்லாம்
ஊறு இன்றி வாழ்ந்தோம்!

வெள்ளைக்காரன் ஆட்சியிலும்
வெள்ளநீரைத் தடுத்தே- அன்று
பென்னிகுவிக் கொடையாலே
பெரியாரணையும் கண்டோம்!

பட்டணத்து ஏரியெல்லாம்
கட்டிடமாய் செய்தே- இன்று
பட்டிக்காட்டு கண்மாய்களும்
பட்டாபோட்டு விற்றோம்!

மழைநீரை சேகரிக்க
மறந்து போனதால- இன்று
சிறுநீரும் வத்திப்போயி
சீரழிஞ்சு நிக்கோம்!

படிக்காத மேதை தந்தார்
பல்நோக்குத் திட்டம்- இன்று
யோகத்து முதல்வர் தந்தார்
யாகநோக்குத் திட்டம்!

இப்படியே போனாக்க
இன்னும் என்ன ஆகும்?!- வாழ்வு
கேள்விக்குறிப் போலவளைஞ்சு
கேவலமாப் போகும்!

#நீரின்று_அமையாது_உலகு

✍️செ. இராசா

No comments: