24/06/2019

#பாயின்_வேதனை


உறங்கையில் உடனிருந்தேன்
உறவுக்குக் கை கொடுத்தேன்!

பந்தியிலே முந்தி நின்றேன்!
பந்தங்களைத் தாங்கி நின்றேன்!

சூட்டிலே இதம் தந்தேன்!
குளிரிலே சுகம் தந்தேன்!

பிரசவத்திலும் விரிப்பானேன்!
பிறர் சவத்திலும் விரிப்பானேன்!

எப்போதும் துணை வந்தேன்!
இப்போது ஒதுக்கி விட்டீர்!

#பாயின்_வேதனை

No comments: