08/06/2019

#பூமியின்_சீற்றம்



பச்சை மேனியை
பங்கம் செய்தாய்
பொறுத்திருந்தேன்

ஊசியைச் சொருகி
உதிரம் குடித்தாய்
பொறுத்திருந்தேன்

புகையை ஊதி
புன்னகை செய்தாய்
பொறுத்திருந்தேன்

குடைந்து குடைந்து
கொடுமை செய்தாய்
பொறுத்திருந்தேன்

கழிவுகளைக் கொட்டிக்
களிப்புற்றாய்
பொறுத்திருந்தேன்

நெகிழியின் உறையால்
நெஞ்சைக் கிழித்தாய்
பொறுத்திருந்தேன்

 

அணுவை சிதைத்து
அகம் மகிழ்ந்தாய்
பொறுத்திருந்தேன்..

பொறுத்து பொறுத்து
புண்ணாய்ப் போனேன்..
பொறுத்தது போதும்
பொங்கி எழுவேன்...

எரிமலைக் குழம்பாகி
எவரையும் எரிப்பேன்
மலையைப் பிடுங்கிப்
மண்டையைப் பிளப்பேன்
கடலைக் கொட்டி
உடலைக் கிழிப்பேன்

மீண்டும் சமைப்பேன் மனிதா
நீ இல்லாப் புது உலகை..

#பூமியின்_சீற்றம்

No comments: