09/06/2019

பணம் வந்ததால்- நஞ்சுக் குணம் வந்ததால்






பணம் வந்ததால்- நஞ்சுக்
குணம் வந்ததால்- நெஞ்சம்
சினம் கொண்டதால்- மங்கை
மனம் நொந்ததால்
மதுபற்றித் திரிகின்ற மனிதன்- அவன்
மதிபற்றி அறியாத மடையன்!

இடர் வந்ததால்- கொஞ்சம்
கடன் வந்ததால்- நெஞ்சம்
உடன் பட்டதால்- மீண்டும்
கடன் பட்டதால்
உலகத்தைத் துறக்கின்ற மனிதன்- அவன்
உயிர்பற்றி அறியாத மடையன்!

✍️செ. இராசா

No comments: