10/06/2019

#மெய்ப்பொருள்


கெட்டுப் போகும் பாலின் உள்ளே
கெடாத நன்நெய் உறைவதுபோல்
விட்டுப் போகும் உயிர்களின் உள்ளே
விடாத வினைகள் உறைகிறதே!

அழிந்து போகும் மலரின் உள்ளே
அற்புத மதுரம் உறைவதுபோல்
ஆடித் திரியும் வாழ்வின் உள்ளே
அற்புத ஞானம் உறைகிறதே!

உப்புக் கரிக்கும் கடலின் உள்ளே
உயிர்கள் உவந்து உறைவதுபோல்
தப்பாய்த் தெரியும் உலகின் உள்ளே
தத்துவ ஞானம் உறைகிறதே!

✍️செ. இராசா

No comments: