11/02/2018

காதலெனும் தேர்வெழுதி-களஞ்சியம் கவிதைப் போட்டியில் (92) பங்குபெற்ற கவிதை




காதலெனும் தேர்வெழுதி
************************
காலையிலே கதிரவனாய்
மாலையிலே வெண்ணிலவாய்
எனக்காக வலம்வந்த
என்னழகுப் பெண்ணிலவே...

கச்சிதமாய்ச் சொல்லெடுத்து
கவிதைகளை வார்த்தெடுக்கும்
கவிஞராக மாற்றிவிட்ட
கட்டழகுக் காரிகையே....

கண்ணழகில் எனை இழுத்து
கற்பனையில் சிக்க வைத்து
காதலெனும் தேர்வெழுதி
காக்கவைத்த காதலியே...

விடையெதுவும் தெரியாமல்
விழிபிதுங்கி நானிருக்க...
அன்பான புன்னகையால்
அழைப்பிதழைத் தந்தாயே!

No comments: