19/02/2018

மழை



சாதி மதம் பார்க்காத
சமத்துவக் குணத்தோடு
மேடு பள்ளம் காணாத
சமநோக்குப் பார்வையோடு
இரவார்க்கும் தருகின்ற
ஈரமுள்ள நெஞ்சோடு
இறங்கி வந்து உதவி செய்யும்
இறைவனின் தன்மையோடு
நீராகப் பொழிகின்ற
நீரின்றி உலகேது........

—-செ. இராசா—-

No comments: