18/02/2018

எழுதுகோல் பேசுகின்றேன்-களஞ்சியம் கவிதைப்போட்டி (93)- வெற்றிக்கவிதை

93வது களஞ்சியம் கவிதைப் போட்டியில் கவிதை எழுத எமக்கு வாய்ப்பளித்த திரு.சேக்கிழார் அப்பாசாமி அண்ணா அவர்களுக்கும், இரண்டாம் இடத்திற்கு அடியேனின் கவிதையை தேர்வு செய்த நடுவர் திரு. கோபிநாத் ஐயா அவர்களுக்கும் மற்றும் ஊக்கம் தந்து பாராட்டிய அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


எழுதுகோல் பேசுகின்றேன்
**************************
கரங்கள் இரண்டாலும்
கற்களில் செதுக்குகின்ற
கல்லுளியாய்ப் பிறந்தவன் நான்..

பல்லாயிரம் கவிதந்த
பனையோலைச் சுவடிகளின்
பண்டைய எழுத்தாணி நான்.....

தொட்டுதொட்டு மை எடுத்து
தோல்துணி தொட்டெடுத்த
தொன்மைமிகு தொடுகோல் நான்...

கழுத்தளவு மை நிரப்பி
காகிதத்தில் வடிக்கின்ற
காகித எழுதுகோல் நான்....

எத்தனையோ காலங்களாய்
எழுத்துக்கள் ஈன்றெடுக்கும்
எழுதுகோலாய் இருப்பவன் நான்...

தொடுதிரையின் வருகையிலும்
தொலைதூரம் போகாமல்
தொடுவிரலாய் தொடர்பவன் நான்...

என்றென்றும் உங்களோடு நான்....

——செ. இராசா—-

https://www.facebook.com/groups/1535309520121292/search/?query=Gopinath 

No comments: