13/02/2018

நாயடியேன் வேண்டுகின்றேன்





ஆதி முதல் அந்தம்வரை
ஆன பொருள் அத்தனையும்
கூடி நின்ற தத்துவமாய்
கோடி முகம் கொண்டவனே!

உருவத்திலே சிவனென்றும்
அருவத்திலே அன்பென்றும்
அருஉருவ லிங்கமென்றும்
ஆகிநின்ற தத்துவமே!

இருப்புநிலை சிவமென்றும்
இயக்கநிலை சக்தியென்றும்
இரண்டுநிலை ஒன்றாக
இணைந்துள்ள இறைநிலையே!

அறிவுநிலை அறியாத
அறிவிலியாய் இருந்தவனை
நாயகனே பொறுத்தருள்வாய்
நாயடியேன் வேண்டுகின்றேன்!

—- மகா சிவராத்திரி வாழ்த்துகள்

No comments: