14/02/2018

மிதிலையில் காதல்



கீழ் ஊரும் இரையைக் காணும்
மேல் மாடப் புறாவைப்போல
கீழ் சென்ற இறையின் உருவை
மேல் நின்று கண்டாள் சீதை!

விண்ணில் உள்ள மீனைக் கண்டு
தன்னை மறந்த குழந்தை போல
கண்ணில் விழுந்த சீதை கண்டு
தன்னை அன்று மறந்தான் இராமன்!

நான்கு விழிகளும் மோதி நிற்க
நாயகன் நாயகி நின்ற நிலை- ஒரு
மொழியின்றி பேசிய மோனநிலை-அது
மிதிலையில் பொழிந்த காதல் மழை!

—-செ. இராசா—-

No comments: