23/02/2018

வாழ்க பேகன்




 
சிவனின் பரதம் ஆடுகின்றான்- இவன்
சிந்தையிலே தினம் மகிழ்கின்றான்!

பந்தைக் காலில் உதைக்கின்றான்-இவன்
பந்த பாசத்தில் நகைக்கின்றான்!

சிவாவின் மகனாய் சிரிக்கின்றான்-இவன்
சித்தப்பா என்னையும் நினைக்கின்றான்!

குறளினைத் தெளிவுடன் கூறுகின்றான்- இவன்
குரலினை உயர்த்தியேப் பேசுகின்றான்!

வள்ளலின் வாரிசாய் வருகின்றான்- இவன்
துள்ளலில் சிவாவையே மிஞ்சுகின்றான்!

வாழ்க மகனே...
வாழ்க பேகன்...

No comments: