07/02/2018

அடிக்கடி வரும்......



அடிக்கடி அன்பில் வரும்
அழையா விருந்தாளியே...
இம்முறை வந்த நீ- ஏன்
இன்னும் செல்லவில்லை?

அவ்வளவு பிடிக்குமா என்னை?

வந்தாய்...
இருந்தாய்.....
கட்டிப்பிடித்தாய்....
தலைவலி தந்தாய்
தும்ம வைத்தாய்- ச்சீயென
துப்ப வைத்தாய்....

இருந்தும்
போகாமல் உயிரை வாங்குகிறாய்...

போய்விடு....:
சளியே போய்விடு

முடியல....

——செ. இராசா—-

No comments: