11/02/2018

பத்மஶ்ரீ முருகானந்தம்


மாதவிடாய் காலங்களில்
மனைவியுற்ற துயர்கண்டு
மகளிரினம் அத்தனைக்கும்
மாற்றுவழி தீர்வுவேண்டி 


சோதனைகள் செய்கையிலே
வேதனைகள் வந்தபோதும்
உரியவரும் உறவினரும்
உதறித்தள்ளிப் போனபோதும்

மனதிலுறுதி குறையாமல்
மலிவுவிலை பொருள்செய்த
பத்மஸ்ரீ முருகானந்தத்தை
பாராட்டி மகிழ்ந்திடுவோம்!

—வாழ்க வளமுடன் ஐயா—-

(இவரால் தமிழர்கள் அனைவருக்கும் பெருமை. இவரை வைத்து “ பேடு மேன்” என்ற திரைப்படம் ஹிந்தியில் எடுக்கப்பட்டுள்ளது)

No comments: