11/02/2018

ஆட்டுக்கல்லும் அம்மிக்கல்லும்



அசையாத கல் மேலே
அசைகின்ற கல் சேர்ந்து
இரு கல்லும் சிவன்போலே
இணக்கமாய் இணைந்திருக்க
ஆற்றலின் சக்தியினால்
அதன் வேகம் அதிகரித்து
சிக்கியதன் தன்மைக்கேற்ப
முக்தியும் கிடைக்குமன்றோ?!!!

---செ. இராசா----

No comments: