09/08/2022

வியர்வை

 


பணக்கார மேனியில்
பார்த்திடாத; நீர்
பாட்டாளி மேனியில்
பாய்ந்து வருகிறாய்....

வாடை காலத்தில்
வற்றிவிடும்; நீர்
கோடை காலத்தில்
குதித்து வருகிறாய்....

ஊட்டி அறைக்குள்
உறங்கிவிடும்; நீர்
பூட்டிய அறைக்குள்
பொங்கி வருகிறாய்...

அசையாத தேகத்தில்
அடங்கியுள்ள; நீர்
அசைகின்ற தேகத்தில்
ஆர்ப்பரிக்கிறாய்...

காற்றின் கூடலில்
கானலாகும்; நீர்
காதலின் கூடலில்
கவிதையாகிறாய்...

உச்சி வேளையில்
நசநசக்கும் நீர்
உச்ச வேலையில்
கமகமக்கிறாய்....

உண்மையில்..
நீர் அதிசயமே...

#வியர்வை

இந்தத் கவச உடையைப் போட்டதால் ஏற்பட்ட வியர்வையில் உருவான வரிகள்....

வளர்ந்த மனிதர்கள் பக்கத்தில் நின்றால் நம் உயரம் தெரியாது என்பது இதுதானோ?!
அநியாயத்துக்கு வளர்ந்திருக்கான்... இந்த செர்பியாக்கார தம்பி.....படத்தின் Frameக்குள் கூட அடங்கல...


No comments: