14/08/2022

ராஜேந்திரச் சோழன்

 


ராஜராஜ சோழராஜ ராஜேந்திரச் சோழனே
ராஜராஜ சோழராஜ ராஜாதி ராஜனே
 
கப்பல்கட்டி கடலிலோட்டி
......கண்டந்தாண்டி வென்றவன்!
கப்பம்கட்டும் அரசினர்க்கும்
......கண்ணில்தெய்வம் ஆனவன்!
 
கோவில்கட்டி குளமும்வெட்டி
.......கோட்டைகட்டி ஆண்டவன்!
நாவில்வெட்டி நியாயம்பேசும்
.....மன்னர்நெஞ்சில் தீயிவன்!
 
ஆமைசெல்லும் பாதைகண்டு
........ஆழிவென்ற சோழனே!
நேர்மைசெல்லும் பாதைகண்டு
........நீதிநின்ற ராஜனே!
 
கங்கைகொண்ட சோழனென்ற
.......ராஜேந்திர சோழனே!
நங்கைபேரில் ஏரிதந்த
.......நீர்தானே ராஜனே!
 
ராஜராஜ சோழராஜ ராஜேந்திரச் சோழனே
ராஜராஜ சோழராஜ ராஜாதி ராஜனே]
 
எந்தசாதி உந்தன்சாதி
......என்றுவுன்னை ஆய்கிறார்!
அந்தசாதி மன்னரென்றே
........ஆருடங்கள் சொல்கிறார்!
 
சாதியென்ன சாதியென்று
........சாட்சிதேடும் மாக்களே...
சாதியென்ன ஆனபோதும்
.......சாகமொய்க்கும் ஈக்களே...
 
போதும் போதும் போகும் போதும்
....சாதி பேதம் போதுமே...
மோதும் போதில் ஓடிப் போகும்
....ஆதி அந்தம் யாவுமே....
 
✍️செ. இராசா

No comments: