20/08/2022

தன்னைப்போல் யாரென்று ......தற்பெருமை கொள்ளுபவர்

தன்னைப்போல் யாரென்று
......தற்பெருமை கொள்ளுபவர்
என்னைப்போல் இல்லையென
......எப்போதும்- முன்மொழிவர்
ஒன்றைப்போல் இவ்வுலகில்
......ஒன்றுமில்லை என்பதனை
என்றைக்கும் ஏற்பதில்லை
..... ஏன்?

ஆழ்கடலா ஆர்ப்பரிக்கும்?
......ஆவினமா கொக்கரிக்கும்?
பாழ்மனமா பூச்சொரியும்?
......பண்டிதமா- கீழ்நோக்கும்?
ஊழ்வினைதான் தான்'சொல்லும்
......உன்வினைதான் பேர்சொல்லும்
ஆழ்மனம்தான் யார்சொல்லும்
......அங்கு!

✍️செ. இராசா

No comments: