30/08/2022

வெண்பாவில் பாடல் எழுதமுடியுமா?

 



இதோ பொழிப்பு மோனையில் மட்டும் இரண்டாம் அடியில் சமரசம் செய்துகொண்டு எழுதியுள்ளேன். பாடுங்க...பாடலாம்)
 
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துணக்கு நான்தருவேன்..
......இன்னும் பிள்ளையாருக்கு அதேதானா?
....... கொஞ்சம் மாத்துங்கய்யா
 
ஐயா பெரியய்யா
.....அத்தனையும் உன்னதய்யா
பொய்யா எதைக்கொடுப்பேன்
......சொல்லய்யா?- மெய்யய்யா
உந்தன் குறையென்றால்
........ஓர்பொருள்தான் உள்ளதய்யா.
எந்தன் அறியாமைய் யா!
 
தேனும் திணைமாவும்
.......செஞ்சுவச்ச மோதகமும்
நானும் கொடுக்கணுமா
.......சொல்லய்யா?- நீனும்
பிடிச்ச கொலுக்கட்டைப்
.......போரடிச்சா விட்டுடய்யா
பிடிச்சத நான்தாரேன் யா!
 
மண்ணில் உருவானால்
......மண்ணேதான் தீர்வென்றா
மண்ணில் பிறந்தாயோ
......சொல்லய்யா?- எண்ணிப்
பிடிச்ச களிமண்ணின்
........பிள்ளையார் நீரய்யா?
முடி(ந்)த்ததும் நீர்தானய் யா‌..
 
✍️செ‌ இராசா

No comments: