16/08/2022

இருக்கையில நினைக்க மாட்டான்

 

இருக்கையில நினைக்க மாட்டான்
எவனும் நல்ல ஆளை..
இறந்தபின்னே போட்டிடுவான்
எம்மாம் பெரிய மாலை...
 
ஆ..........நீ
 
வளரயில கொடுக்க மாட்டான்
எவனுமிங்கேக் கைய..
வளர்ந்தபின்னே வந்துநிப்பான்
வாழ்த்து சொல்லப் பைய...
 
என்ன தர்மம்டா? என்ன கர்மம்டா?
ஒன்னும் புரியாம.... சுழலும் உலகம்டா....
 
✍️செ. இராசா

No comments: