18/08/2022

வடிவானவள் .....வெடியாயென ...........வருவாளெனில் யாவும்

 


#இன்றைய_தினம்_பிறந்தநாள்_கொண்டாடும்
#மனைவியாருக்கு
#இனிய_பிறந்தநாள்_வாழ்த்துகள்

வடிவானவள்
.....வெடியாயென
...........வருவாளெனில் யாவும்
அடிதூளென
.......அடடாவென
.............அழகோவியம் ஆகும்!
இடியாயிலை
......இசையாயென
............எனிலோடிடும் தாளம்!
முடிவாகிட
........முறையாயொரு
...............மொழிவாயொரு ராகம்!

விழியாடிடும் மொழியால்-நீ
மொழிவாய்ப் பழபொழிகள்....
இதழோவிய வரியால்- நீ
தருவாய்ப் புதுக்கவிகள்‌‌..
...யாவும்
.......ஆகும்
.........தாளம்
‌............ ராகம்

கலையானவள்
......கவியாயென
.........வருவாளெனில் நாளும்!
நிலைமாறிய
..... நிலையாயென
..........நிஜமாகவே மாறும்!
சிலையானவள்
.......சிகையாடிட
........‌..சிரிப்பாளெனில் பாரம்!
தலைகீழென
.... தடுமாறிட
.........விரைந்தோடியேப் போகும்!

மரபோடிடும் உடையால்- நீ
வருவாய்ப் புதுநடையில்...
தமிழாடிடும் உரையால்- நீ
தணிப்பாய் மனச்சுமைகள்...
......நாளும்
.... ....... மாறும்
...................பாரம்
...................போகும்!

✍️செ. இராசா

No comments: