21/04/2020

முகநூல்- குறள் அந்தாதி







#விருப்பு வெறுப்பான வெற்றுக் களம்போல்
இருந்தால் முகநூல் #எதற்கு?
(1)

#எதற்காக இப்படி ஏட்டிக்குப் போட்டி
அதனால் கெடாதா அகம்?
(2)

#அகநூலில் உள்ளதெல்லாம் அப்படியே சொல்வோர்
முகநூலில் உண்டா #முதல்?
(3)

#முதலில் கருத்திட்டு முன்னேற்றி விட்டோர்
எதனால் வரவில்லை #இன்று
(4)

#இன்றைக்கும் மாறாமல் இம்மென்றே உள்ளோர்கள்
என்றைக்கும் அப்படியே #இங்கு
(5)

#இங்கேயும் அங்கேயும் எங்கேயும் தாவாமல்
சிங்கமாய் நிற்போரைச் #சேர்
(6)

#சேர்கின்ற சேர்க்கை சிறப்பாய் இருந்திட
வேர்வரை ஆய்ந்தபின் #வேண்டு
(7)

#வேண்டி வருவோர்கள் வீண்வாதம் செய்தாலும்
வேண்டாம் வெறுப்பு #விருப்பு
(8)

✍️செ. இராசா

No comments: