04/04/2020

மெட்டு: நீராரும் கடலுடுத்த


வேரோடு களைந்திடவே விருப்பமுடன் முடிவெடுப்போம்
பாரோடு பயங்காட்டிப் படுத்துமந்தப் பாவியினை
இக்கணமே விரட்டிடவே எடுக்கின்ற நல்முடிவால்
மக்களெல்லாம் மனமகிழும் தருணங்களும் திரும்பிடுமே
அத்தருண வாழ்வினைப்போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் ஒளிபரப்ப இணக்கமுற இணைந்திடுவோம்!
இணைந்திடுவோம்!!

நம் சீர் மிகுந்த நலம் நினைந்து மனம் விரிந்து
வாழ்த்திடுவோம்!
வாழ்த்திடுவோம்!!
வாழ்த்திடுவோம்!!!

✍️செ. இராசா
பாடலாகக் கேட்க இங்கே


https://www.facebook.com/1529793087155445/posts/1861046514030099/?vh=e&d=n

No comments: