02/04/2020

#கவியில்_கம்பனின் காவியம் போலே

மெட்டுக்காக எழுதிய ஒரு பாடல்
********************************
#கவியில்_கம்பனின் காவியம் போலே
#புவியில்_செழியனின் ஓவியம்போலே
காணும் உலகம் எல்லாம் நீதானே!
இசையில் அழகிய சிம்பொனி போலே
மனதில் கொட்டிடும் பேரிகை போலே
கேட்கும் யாவும் உந்தன் பேர்தானே!

முந்நாள் நான் கண்டதுமில்லை
இந்நாள் நிலை வந்ததுமில்லை
உடலின் செல்கள் தீயாய் எரிகிறதே!
கோவில் நான் சென்றதுமில்லை
தெய்வம் எனைத் தீண்டவுமில்லை
என்னுயிர் முழுதும் தீபம் ஒளிர்கிறதே!

உன்போல் தமிழ் இனிக்கிறதே
அன்பாய் எனை அழைக்கிறதே
உன்னைக் கவிக்கச் சொல்லிக் கதைக்கிறதோ?
ஆகாயம் உயரம்தான் ஆனாலென் அருகில்தான்
ஏற்பாய் அன்பே எந்தன் கவிதை நீ!
உடை போட்ட நிலாவாய்க் கனவில்
அணைத்தாயென் உயிரே அருகில்
மனதாலே மகிழும் தருணங்கள்!

மழையாய்ப் பெய்திடுவோம்
நதியாய் நாம் தழுவிடுவோம்
ஆத்மாவின் வேர்வரை நனைந்திடுவோம்!
கண்போடும் உறவெல்லாம்
தன்னால் தினம் ஏதேதோ
கதைகட்டும் வழியை அடைத்திடுவோம்’
கரங்கள் நான்கும் தழுவ
மணமேளங்கள் நாயணமுழங்க
அதுபோதும் எதுவும் தேவையில்லை!

✍️செ. இராசா

No comments: