27/04/2020

கொரானா பேரால நடக்குதுங்க கொள்ளை

கொரானா பேரால
நடக்குதுங்க கொள்ளை- இங்க
நடக்குதுங்க கொள்ளை
ஆனாலும்
எங்களுக்கு வேற வழி இல்லை
ஆமாம் வேற வழி இல்லை
ஆமாம் வேற வழி இல்லை

மாசம் முழுக்க உழைச்சுப்பட்டு
மாடு மாறி உதைச்சுப்புட்டு
காசுக் கொடுக்கும் நேரத்தில
காசக் குறைச்சுக் கொடுக்கையில
என்னான்னு கேள்வி கேட்டால்
இன்னான்னு கேட்குறாங்க!
வேண்டான்னு சொன்னாக்க
வேண்டாமுன்னு சொல்லுறாங்க!

...(கொரானா பேரால)

வருசம் முழுக்க உழைச்சதில
வரவு கூடிப் பெருத்ததில
அள்ளி எதுவும் கொடுத்ததில்லை
கிள்ளிக் கூட தந்ததில்லை
இப்படிப் பட்ட நிலைமையில
எப்படி இப்படி செய்யுறாங்க?!
பாசுகிட்டபோயி நின்னால்
பீசப் புடுங்கி அனுப்புறாங்க!

...(கொரானா பேரால)

ஷூமில் கிளாஸ் நடத்தினாலும்
ஸகூலில் பீசு குறையவில்லை
காசக் கொட்டிக் கொடுத்தாலும்
ஸ்டாபுக்கவன் கொடுக்கவில்லை
போட்டுக் கொடுக்கச் சொன்னாக்க
போட்டுக் கொடுத்து விரட்டுறாங்க!
ஆடு போல ஆமான்னா
போடு போடுனு போடுறாங்க!

...(கொரானா பேரால)

✍️செ. இராசா

No comments: