05/04/2020

கொரானாக் குறள் அந்தாதி-2



நேர்மறை யாளராய் நேர்வதைக் காண்பவர்
வார்த்தையும் நேராய் வரும்

வருகிற துன்பம் வராமல் இருக்க
விருப்புடன் செய்வோம் வினை

வினையின் பலனை விதைத்தோன் அறுப்பான்
நினைவில் இதனை நிறுத்து

நிறுத்தம் கொடுத்து நிதானம் அடைந்தால்
உறுதியாய் வெல்லும் உலகு

உலகை மிரட்டும் ஒருவகை வைரஸ்
விலகுமா எங்கே விளக்கு

விளங்கா திருந்தால் விளக்கம் கிடைக்கும்
விலங்கா யிருந்தால் விலகு

விலகிட எண்ணி விளக்கினை ஏற்றப்
பலரும் நினைந்தால் பயன்

பயனைப் பொறுத்தேப் பழகும் சிலர்க்கு
நயமாய் உரைத்தல் நலம்

நலமுடன் செய்தும் நடப்பவை ஊழின்
நியதியால் நேருக்கு நேர்

✍️செ. இராசா

No comments: