20/04/2020

குறள் அந்தாதிகள்



#நிரப்பிய பானைக்குள் நீரூற்றும் எண்ணம்
விரயமே வேண்டாம் #விடு
(1)

#விடுகின்ற தோட்டாபோல் விட்டவனின் எண்ணம்
சுடுகின்ற போதே #சுடும்
(2)

#சுடுபட்ட பூனைக்கு சூட்டினைப் பற்றி
எடுக்கின்ற பாடம் #எதற்கு?
(3)

#எதற்கும் எதிர்க்கிற எண்ணம் இருந்தால்
உதறும் ஒருநாள் #உறவு
(4)

#உறவைப் பெருக்க உவகைப் பெருக்கி
மறப்பதை எல்லாம் #மற
(5)

#மறவா நிகழ்வு மகிழ்வைக் கொடுத்தால்
நிறைய நினைவை #நிரப்பு
(6)

✍️செ.இராசா

குறிப்பு:

அந்தாதி என்றால் இறுதிச் சீரை முதல் சீராக்கித் துவங்குவது மட்டுமல்ல, இறுதிக் குறள் வெண்பாவின் இறுதிச்சீரும் முதல் வெண்பாவின் முதற்சீராக இருக்க வேண்டும்.

(இங்கே எம் குருநாதர் விக்டர் தாஸ் அண்ணா கற்றுக் கொடுத்ததையே நானும் அந்தாதிகளில் கடைப்பிடித்து வருகிறேன். நன்றி அண்ணா)

tagTag PhotopinAdd Locat

No comments: