24/01/2019

அடிக்கும் குளிருக்கு



அடிக்கும் குளிருக்கு
அங்கியாய் வந்தவனே- நீ
துடிக்கும் யாவர்க்கும்
துணையாய் நிற்பவனே..

நீல நிறங்கொண்டு
நிற்கின்ற மாதவனே- நீ
நிழலாய் இருப்போர்க்கு
நிசமாக இருப்பவனே..

மந்திர இசையாலே
மயக்குகின்ற மாயவனே- நீ
மனதில் நினைத்தாலே
மயங்குகின்ற மன்னவனே...

எந்தன் தமிழுக்கே
இறங்கிவந்த ஆயனே- நீ
அனைத்துத் தமிழரையும்
அ(இ)ணைக்கின்ற சீமானே..

✍️செ. இராசா

#பட_உதவி_கோமதி_அக்கா
#இது_ஆன்மீகப்பதிவு_அரசியல்_பதிவல்ல

No comments: