06/01/2019

#பகுத்தறிவே_மெய்யறிவு




எழுநூற்று எழுபது கோடியிலே
எவருக்கும் தனியொரு அடையாளம்!
எத்தனை கோடிகள் மிகுந்தாலும்
எவரையும் சுமந்திடும் பூகோளம்!

ஒன்றாய் நமக்குத் தெரிந்தாலும்
ஒவ்வொரு கையிலும் தனிரேகை!
கோடாய் நமக்குத் தெரிந்தாலும்
கோளத்தின் மேல்தான் வாழ்க்கை!

புவியின் மேற்புறம் இருப்பவரோ
வெளியை மேற்புறம் காட்டுகையில்
புவியின் கீழ்ப்புறம் உள்ளவரும்
வெளியை மேற்புறம் காட்டுகின்றார்!

எங்கும் உள்ள பெருவெளியை
எப்படி மாயை மாற்றியது?!!
அறிவுடன் பகுத்து ஆராய்ந்தால்
அறிவது இங்கே சாத்தியமே...!!!

#பகுத்தறிவே_மெய்யறிவு
#அறிவே_தெய்வம்

No comments: