30/01/2019

உன்னால் உயிரையும் இழந்து கொண்டிருக்கிறேன்...




நன்றாக ஞாபகம் உள்ளது
நீ என்னிடம் வந்த
அந்த முதல் நாள்..

மிகவும் கசப்பான சந்திப்பு அது....
அப்போது தெரியவில்லை- நீயே
ஆளப்போகிறாய் என்று

தூரத்தில் பார்த்தபோதும் தெரியவில்லை
தொடும்போதுதான் தெரிந்தது....நீ
அனைத்தையும் உருவுவாய் என்று

இன்று உன்னால் உயிரையும்
இழந்து கொண்டிருக்கிறேன்...

ஆனால்...நீயோ....
அரசு கஜானாவை
நிரப்பிக் கொண்டே(றே) இருக்கிறாய்...

#மது_ஒரு_சமூக_நோய்

-செ. இராசா

(இது கற்பனையே...)

No comments: