29/01/2019

விந்தையின் தந்தை

சிந்தையில் தோன்றிய ஒன்று- நான்
சிந்திட முயல்கின்ற தருணம்- பல
சிந்தனை என்னுள்ளே வந்து- என்
சிந்தையை சிதைக்குது ஐயா!

எந்தை செய்தொரு பிழையாய்- இந்த
கந்தை நிற்கிற பொழுதும்- பல
மந்தை மனிதரைப் போலே - நான்
விந்தையின் தந்தை ஐயா!

✍️செ. இராசா

No comments: