03/01/2019

தேடிச்சோறு நிதம் தின்று



தேடிச்சோறு நிதம் தின்று
ஓடியாடி மண்ணில் வீழ்ந்து
உயிரைத் துறந்திடவா வாழ்க்கை?- சொல்
உயிரைத் துறந்திடவா வாழ்க்கை?

தன்னைப் பெரிதென்று நினைத்து
எங்கும் குறையென்று கதைத்து
காலம் கடத்துவதா வாழ்க்கை- சொல்
காலம் கடத்துவதா வாழ்க்கை?!

கள்ளைத் தினந்தேடிச் சுவைத்து
கட்டில்சுகம் பெரிதாய் நினைத்து
காட்டை நெருங்குவதா வாழ்க்கை- சொல்
காட்டை நெருங்குவதா வாழ்க்கை?

--செ. இராசா

No comments: