12/01/2019

#தொலைக்காட்சி



அரிதாக இருந்தபோதும்
அழகாகத் தெரிந்தாய் அன்று
பக்கத்தில் இருந்த போதும்
பார்க்கவே தோன்றவில்லை இன்று

கருப்பாக இருந்தபோதும்
கலையாக இருந்தாய் அன்று
நிறம் கூடிப்போன போதும்
நிஐமாக இல்லை இன்று

இடை பெருத்து இருந்தாலும்
இதயம் கவர்ந்தாய் அன்று
இடை சிறுத்து போனாலும்
எதையோத் தேடுகிறோம் இன்று(ம்)

#தொலைக்காட்சி

✍️செ. இராசா

(இன்று ஒரு பல்பொருள் அங்காடியில் இரு அரேபிய இளைஞர்கள் தரையில் அமர்ந்து ஏதோ வீட்டில் படம் பார்ப்பதுபோல் பார்த்த இந்த காட்சி என்னைப் பின்னோக்கி எங்கோ அழைத்துச் சென்றது)

No comments: