14/01/2019

#பொங்கல்_நல்வாழ்த்துகள்_2019


எத்தனையோ திறமைகள்
ஏராளம் இருந்தாலும்
ஏதேதோ காரணத்தால்
எல்லோரும் வெல்வதில்லை...

எப்படியோ ஒரு வேளை
எவரோ சிலர் வென்றாலும்
எவருமே நிலையாக
எப்போதும் நின்றதில்லை..

நிலையில்லா ஒரு வாழ்வே
நிலையென்று தெரிந்தாலும்
நிலையாமை வாழ்வென்று
நிற்பதும் முறையில்லை...

உள்ளுக்குள் இருக்கின்ற
உயர்வான உள்ளாற்றல்
தைத்திரு நன்னாளில்
தானாகப் பொங்கிவர
இறைவனை வேண்டுகின்றேன்!
இதயத்தில் வாழ்த்துகின்றேன்!

வாழ்க வளமுடன்!

No comments: