01/09/2017

என் நினைவெல்லாம்------களஞ்சியம் கவிதைப் போட்டியில் (69) பங்குபெற்ற கவிதை (முடிவு வரவில்லை)

களஞ்சியம் கவிதையில் இடம்பெற்று தீர்ப்பு வராத என் கவிதைகள்



"
என் நினைவெல்லாம் நீயென்று"
என்நாளும் சொன்னவளே...
உன் நினைவில் நானிருக்க
எமை இங்கே தவிக்கவிட்டு
எங்கே நீ சென்றாயோ?!

அன்பாலே அம்பெய்து
அடிமனதில் புகுந்தவளே
என் மனதைத் துளைத்துவிட்டு
எமை இங்கே பதறவிட்டு
எங்கே நீ சென்றாயோ?!

இன்பத்தின் மழைபெய்து
இதயத்தை நனைத்தவளே
என் உறவைக் கானலாக்கி
எமை இங்கே கலங்கவிட்டு
எங்கே நீ சென்றாயோ?

கைப்பேசி கதகதக்க
சொல்பேச்சில் மகிழ்ந்தவளே
என் பேச்சை மறந்துவிட்டு
எமை இங்கே விட்டுவிட்டு
எங்கே நீ சென்றாயோ?!

நினைவாலே கரைந்தவளே
என்னுள்ளே உறைந்தவளே
ஏனென்றே தெரியவில்லை?!
எனக்கொன்றும் புரியவில்லை?!
எங்கே நீ சென்றாயோ?!

No comments: