07/09/2017

சுதந்திரமே எங்கே உறங்குகின்றாய்?-----களஞ்சியம் கவிதைப் போட்டி-66 (வெற்றிக் கவிதை)


66வது களஞ்சியம் கவிதைப் போட்டியில் முதலிடம் பிடித்த கவிதை
வாய்ப்பளித்த சேக்கிழார் அப்பாசாமி அண்ணா அவர்களுக்கும், கவிதையை தெரிவு செய்த நடுவர் கவிஞர் வாலிதாசன்
அவர்களுக்கும் ஊக்கம் தந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி!
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
https://www.facebook.com/groups/1535309520121292/permalink/1890108977974676/...


உயிர்களை இழந்துபெற்ற
உரிமைச் சுதந்திரமே- நீ
உதிரத்தை உரிஞ்சுகின்ற
ஊழல் தலைவர்களால்-இங்கே
உறங்கித்தான் போனாயோ?!

தமிழின உணர்வளி(ழி)த்த
திராவிடச் சுதந்திரமே- நீ
தமிழனை வேரறுக்கும்
தீநெறித் தலைவர்களால்-இங்கே
திக்கெற்று நின்றாயோ?!

கண்ணியம் காத்திடாத
காதல் சுதந்திரமே- நீ
காமம் கழிந்தவுடன்
கழற்றிவிடும் காமுகரால்- இங்கே
கற்பினையும் இழந்தாயோ?!

சாதிகள் வளர்க்கின்ற
சாதியச் சுதந்திரமே- நீ
சமநிலை அழிக்கின்ற
சாதியத் தலைவர்களால்- இங்கே
சமத்துவம் இழந்தாயோ?

அடக்கிடத் துடிக்கின்ற
அதிகாரச் சுதந்திரமே- நீ
அமைதியைக் குழைக்கின்ற
அரசியல் தலைவர்களால்-இங்கே
அனைத்தையுமே இழந்தாயோ?!

ஊறுகள் செய்யாத
உண்மைச் சுதந்திரமே- நீ
உறவுகள் மேம்பட
உதவிகள் செய்யாமல்- இங்கே
உறங்கித்தான் போனாயோ?!

-----செ.இராசா-----
https://www.facebook.com/groups/1535309520121292/permalink/1890108977974676/ 

No comments: