07/09/2017

பேசும் முன் யோசி




பேசிடுவீர்.....பேசிடுவீர்...
நல்மொழியில் பேசிடுவீர்
பேசுபவர் மொழியெதுவோ
அம்மொழியில் பேசிடுவீர்...

வன்மொழியோ மென்மொழியோ
கண்மொழியோ மெய்மொழியோ
எதிராளியின் மொழியெதுவோ
அம்மொழியில் பேசிடுவீர்...

சுடுஞ்சொற்கள் சொல்பவரா?
கடுஞ்சொற்கள் பேசிடுவீர்...

மென்மையாகக் கதைப்பவரா?
மெதுவாகப் பேசிடுவீர்...

பொல்லாங்கு சொல்பவரா?!
பொறுப்பாகப் பேசிடுவீர்..

அகங்காரம் பிடித்தவரா?!
அலட்சியமாய்ப் பேசிடுவீர்...

அரசியல் கதைப்பவரா?!
அளவாகப் பேசிடுவீர்...

ஆண்மீகம் அறிந்தவரா?!
ஆழமாகப் பேசிடுவீர்...

நாடகமாய் நடிப்பவராக?!
நாசூக்காய்ப் பேசிடுவீர்...

பொய்பேசித் திரிபவரா?
மெய்பேச்சை தவிர்த்திடுவீர்...

பொறாமை கொண்டவரா?!
பொருளிருப்பை மறைத்திடுவீர்

வீண்பேச்சு கதைப்பவரா?!
விலகியே இருந்திடுவீர்...

தம்பட்டம் அடிப்பவரா?!
தம்குறையைச் சொல்லாதீர்...

உண்மையாக இருப்பவரா?!
உரிமையோடு பேசிடுவீர்...

கருத்தாகச் சொல்பவரா?!
கவிதையாலே பேசிடுவீர்...

(தொடரும்)

----------செ. இராசா----------

No comments: