07/09/2017

எங்கெங்கு காணினும்------களஞ்சியம் கவிதைப் போட்டி-67 (வெற்றிக் கவிதை)

67வது களஞ்சியம் கவிதைப் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த கவிதை.
வாய்ப்பளித்த சேக்கிழார் அப்பாசாமி அண்ணா அவர்களுக்கும் கவிதையை தெரிவு செய்த நடுவர் கோபிநாத் சேலம்
அவர்களுக்கும் ஊக்கம் தந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி!
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
https://www.facebook.com/groups/1535309520121292/permalink/1891641321154775/



------------------------------------
எங்கெங்கு காணினும்
*******************
எங்கெங்கு காணினும் இறை வடிவம்
சிந்தைக்கு விளங்கினால் சிறப்பாகும்!

எப்பொருள் யாவிலும் இறை வடிவம்
சிறப்புடன் இருப்பதே மெய்யாகும்!


இறையும் அணுவும் ஓர் வடிவம்
அறிந்தால் அனைத்தும் தெளிவாகும்!
இருப்பும் ஆற்றலும் மறை வடிவம்
அணுத்துகள் வெளிப்படப் புலனாகும்!

அறிவியல் விளக்கிடும் அணு வடிவம்
எலக்ட்ரான் புரோட்டான் கூட்டாகும்!
ஆண்மீகம் உணர்த்திடும் அணு வடிவம்
சிவமும் சக்தியுமாய் சேர்ந்திருக்கும்!

பிரபஞ்ச ரகசிய ஒலி(ளி) வடிவம்
வெடிப்புதத்துவம் விளங்க வைக்கும்!
பிரபஞ்ச காரண அணு வடிவம்
வெளிப்படும் சக்தியில் மறைந்திருக்கும்!

எதிர்ப்படும் அனைத்திலும் ஒரு வடிவம்
அணுவால் ஆனது தெளிவாகும்!
எதிரியும் இறைவனின் மறு வடிவம்
அறிந்தால் அகிலமே சிறந்தோங்கும்!

--------செ. இராசா--------

(போட்டிக்கான என் இரண்டாம் படைப்பு)

எங்கெங்கு காணினும்
********************
எங்கெங்கு காணினும் நல்லவரா?!
என்றெனில் நீயொரு அப்பாவி!
எங்கெங்கு காணினும் கெட்டவரா?!
என்றெனில் நீயோரு பெரும்பாவி!

எங்கெங்கு காணினும் இன்பங்களா?!
என்றெனில் நீயொரு பெருஞானி!
எங்கெங்கு காணினும் துன்பங்களா?!
என்றெனில் வினையால் விழுந்தாய்நீ!


எங்கெங்கு காணினும் முதியோர்களா?!
என்றெனில் தேவை புதுரத்தம்!
எங்கெங்கு காணினும் இளைஞர்களா?!
என்றெனில் தேவை நிதானம்!

எங்கெங்கு காணினும் அறிஞர்களா?!
என்றெனில் தேசமே சிறந்தோங்கும்!
எங்கெங்கு காணினும் மூடர்களா
என்றெனில் தேசமே சீர்குழையும்!

எங்கெங்கு காணினும் புத்தர்களா?!
என்றெனில் வாழ்விடம் சொர்க்கமாகும்!
எங்கெங்கு காணினும் பித்தர்களா?!
என்றெனில் பாவமே செழித்தோங்கும்!

----- செ. இராசா------
https://www.facebook.com/groups/1535309520121292/permalink/1891641321154775/ 

No comments: