10/09/2017

எது கவிதை?


கசக்கி நசுக்கி அமுக்கி அழுத்தி
உருண்டு புரண்டு முரண்டு திரண்டு
உடைந்து குடைந்து நுழைந்து புகுந்து
செதுக்கி எடுப்பது கவிதையா?

இல்லை

கருத்து புதைத்து வெடித்து முளைத்து
சிலிர்த்து துளிர்த்து செழித்து வளர்த்து
மலர்ந்து விரிந்து மணந்து கனிந்து
பிறந்து வருவது கவிதையா?

No comments: