10/09/2017

{மனசு - மாசு= மனிதம்}


மனிதனின் மனது இதமானால்
மனிதம் மலர்ந்து மணம்வீசும்!
மனிதனுள் மனிதம் இருந்துவிட்டால்
மனித இனமே மகிழ்ந்தோங்கும்!

மனத்தை இதமாய் வைப்பதற்கு
மனத்தின் மாசுகள் அழித்திடனும்!
மனத்தின் மாசுகள் ஒழித்துவிட்டால்
மனிதனில் மனிதம் வெளியில்வரும்!

மறைந்துள்ள மாசுகள் அறிவதற்கு
மறைநூல் திருக்குறள் அதுபோதும்!
மறைநூல் மதிநூல் ஆகிவிட்டால்
மனநூல் மாசுகள் நீங்கிவிடும்!

------செ. இராசா----

No comments: