17/09/2017

எழுதுகோலுக்கு ஒரு கடிதம்


கரங்கள் இரண்டாலும்
கற்களில் செதுக்கிய
கல்உளி எழுதுகோலே...

பல்லாயிரம் கவிதந்த
பனைஓலைச் சுவடிகளின்
எழுத்தாணி எழுதுகோலே...

தொட்டுதொட்டு மை எடுத்து
தோல்துணி தொட்டெடுத்த
அக்கால எழுதுகோலே...

கழுத்தளவு மை நிரப்பி
காகிதத்தில் வடிக்கின்ற
இக்கால எழுதுகோலே...

எத்தனையோ காலங்களாய்
எழுத்துக்கள் உருவாக்கிய
எழுதுகோல் நண்பர்களே.....

எப்படி நான் சொல்லிடுவேன்?!
என்னுடைய நன்றியினை...

இப்படியே பதிக்கின்றேன்....

இப்படிக்கு,

எழுத்துக்கள்.

No comments: