07/09/2017

புரிதல் (புரிந்தவர்களுக்கு மட்டும்)


 

அவனா அப்படி நடந்தான்?
அவனும் அப்படி நடந்தான்
அவனே அப்படி நடந்தான்.

ஆமாம், அவனேன் அப்படி நடந்தான்?

அன்பின் மிகுதியால் பணிந்தான்
பணிந்ததால் அதிகமாய் குனிந்தான்
குனிந்ததால் நிறையவே இழந்தான்
இழந்தபின் உண்மையை உணர்ந்தான்
உணர்ந்ததால் மெய்யினை அறிந்தான்
அறிந்ததால் அப்படி நடந்தான்.

ஆனாலும்...
அவனேன் அப்படி சொன்னான்?

தீயென்று சொன்னான்...
அதனாலென்ன?
தீதொன்றும் அறியாத ஒருவன்
தீயென்று சொன்னால்தான் என்ன?!

வார்த்தைகள் பலவாறு சொன்னான்.....
அதனாலென்ன
அவன்தானே சொன்னான்?

சொற்களின் பொருள்கள்
சொல்பவனைப் பொருத்தும் வேறுபடும்!
சொல்பவன் மனநிலை பொருத்தும் வேறுபடும்!
சொல்லும் காலத்தைப் பொருத்தும் வேறுபடும்!

அவனேன் அப்படி நடந்தான்?!
.........
நிழலாய் தொடர்ந்தால் தெரியும்
நிஜமே அசலெனப் புரியும்

------செ. இராசா-------

No comments: