07/09/2017

அன்பு செய்


அன்பு சிறுத்த உள்ளத்திலே
தவறு பெரியதய்யா...
அன்பு பெருத்த உள்ளத்திலோ
தவறு சிரியதய்யா...

தவறு செய்யா மனிதர்களே
உலகில் இல்லையய்யா....
தவறை உணரா மனிதர்களோ
உலகில் தொல்லையய்யா....

மன்னிக்கின்ற மனிதர்களே
மண்ணில் தெய்வமய்யா....
மன்னிக்காத மனிதருக்கோ
மாண்பு மறையுமய்யா...

அன்பு என்ற ஆயுதமே
அதிகத் தேவையய்யா...
அன்பு மட்டும் இல்லையென்றால்
அகிலம் இல்லையய்யா...

அன்பில் நகைக்கும் மனிதருக்கு
ஏது துன்பமைய்யா....
அன்பாய் வாழும் மனிதருக்கு
எதுவும் இன்பமைய்யா....

---செ. இராசா---

No comments: