17/09/2017

கனவே கனவே கலையாதே...


கனவே கனவே கலையாதே!
கானலாய் நீயும் மறையாதே!
கிழமை ஒருநாள் தவறாதே!
கீதைபோல் உரைத்திட மறவாதே! I
குணத்தின் தன்மையில் குன்றாதே!
கூறா விடயங்கள் கூறாதே!
கெட்டதை என்னுள் காட்டாதே!
கேள்விகள் கேட்பதை நிறுத்தாதே!
கைகள் கொடுப்பதைத் தடுக்காதே!
கொடுமையின் நிகழ்வுகள் கூறாதே!
கோபத்தில் வேகம் கொள்ளாதே!
கௌரவர் மாமனாய் நடக்காதே!

அப்துல்கலாம் ஐயா கண்டதெல்லாம்
ஆயிரம் அற்புதக் கனவுகளே...
இந்திய தேசம் உயிர்த்தெழவே
ஈகையின் நாயகன் கனவுகண்டார்...
உண்மையில் இளைஞர்கள் ஒளிபெறவே
ஊக்கங்கள் தந்தே மகிழ்வுற்றார்...
என்றும் கனவுகள் கலையாமல்
ஏழையின் தோழனாய் காட்சிதந்தார்...
ஐயா கனவுகள் நினைவாக
ஒவ்வொரு நாளும் முயன்றிடுவாய்....
ஓர் கனவதுவாய் கண்டிடுவாய்...
ஓளதாரியம் அஃதென வாழ்ந்திடுவாய்..

கனவே கனவே கலையாதே...
கலாம்ஐயா கனவினை மறவாதே...

No comments: