07/09/2017

மனிதர்களும் மாக்களும்



எத்தனை எத்தனை மனிதர்களோ
அத்தனை அத்தனை குணங்களம்மா!
எங்ஙனம் நற்குண மனிதர்களோ
அங்ஙனம் ஆனந்தம் தோன்றுமம்மா!

எளிமை பொறுமை கொண்டவரே
மனிதம் போற்றிடும் மாந்தரம்மா!
என்றும் பொறாமை கொள்பவரோ
மண்ணில் பிறந்த மடையரம்மா!

அன்பும் பண்பும் நிறைந்தவரே
அகிலம் விரும்பிடும் மனிதரம்மா!
ஆசையும் பற்றும் நிறைந்தவரோ
அனைத்தும் இருந்தும் ஏழையம்மா!

கற்பும் நட்பும் காப்பவரே
கடவுள் விரும்பிடும் புனிதரம்மா
கடமையில் கஞ்சன் ஆனவரோ
கடைசியில் வீழ்வது நிகழுமம்மா!

அனைத்திலும் நிறைகளைக் காண்பவரே
அகத்தினில் மகிழ்ந்திடும் மக்களம்மா!
அனைத்திலும் குறைகளைக் காண்பவரோ
அமைப்பினில் மனிதரெனும் மாக்களம்மா!

-----செ. இராசா----/

No comments: