07/09/2017

காரணம் யாரென்பீர்?!


செல்லரித்த புகைப்படத்தில்
புல்லரிக்கும் புன்சிரிப்பால்
காட்சிதரும் குழந்தையது
காண்போரின் கண்களிலே
கவிதையாக மலர்வதற்கு
காரணம் யாரென்பீர்?!

கருப்பு வெள்ளை நிறம் மறைத்து
நெருப்பு வண்ண ஒளிவீசி
கண்கவர் ஓவியமாய்
கட்டழகு காட்சியாகி
கண்களிலே விரிவதற்கு
காரணம் யாரென்பீர்?!

----செ.இராசா----

No comments: