30/04/2023

வெள்ளியங்கிரி ---------- சிவனே போற்றி

 

அவனாயிவன் இவனாஅவன்
அடயாரென என்றே..
சிவனேமகன் சிரமோங்கிட
தருவாய்வரம் நன்றே...
 
அவரோகணம் இனியாவிலும்
ஆரோகணம் ஆகும்
சிவனேயெனுள் வருவானெனில் 
தீராவினை தீரும்!
 
தவறானவை சரியாகிடத்
தவமாய்தவம் செய்யும்
சிவனேயெனைத் தெளிவாக்கிட 
தமிழாளுமை தாரும்!
 
அவமானமும் அநியாயமும்
அணுகாதினி என்றே..
சிவனேசனாய் உருவானயென் 
திறம்கூட்டுவாய் இன்றே..
 
✍️செ. இராசா

No comments: