15/04/2023

கடவுளைப் புரிந்தவர் ..... கடந்திடும் எல்லை

 

கடவுளைப் புரிந்தவர்
..... கடந்திடும் எல்லை
கடனென உழல்பவர்
.....காண்பது.. இல்லை!
இடத்தினைப் பகையென
.....இகழ்ந்திடும் தொல்லை
இடமெலாம் தமதெ(ரெ)ன
.....நினைப்பவர் கில்லை!
 
வருவதில் மகிழ்பவர்
......வருந்துவ தில்லை
வருவதை இகழ்பவர்
......மகிழ்வது... இல்லை
இருப்பதில் கொடுப்பவர்
.....இறைவனின் பிள்ளை
இருப்பினை மறைப்பவர்
.....இருந்துமே இல்லை!
 
✍️செ. இராசா

No comments: