11/04/2023

தமிழாலிவன் உருவானவன்

  


தமிழாலிவன் உருவானவன்
....தரமானவன் என்றே...
தமிழாளுமை குருவானவர்
....மொழிந்தார்பெயர் நன்றே!

புவியாவிலும் புகழோங்கிட
....புரிந்தான்செயல் என்றே..
கவியாள்பவர் குழுயாவிலும்
...கவிப்பார்குரல் ஒன்றே!

தலையேறிடா தலையாலிவன்
...தலையானவன் என்றே
கலையூறிய கலைஞானியர்
...கணித்தார்பலர் நன்றே!

புகழ்போதையில் தடம்மாறிடா
....புதிரானவன் என்றே...
இகம்யாவிலும் எடுப்பாரினி
.... இவன்பேரினை ஒன்றே...

✍️செ. இராசா

No comments: